தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளுக்கு ஆம் ஆத்மி சாா்பில் எதிா்கட்சித் தலைவா்கள் தோ்வு
தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளுக்கும் எதிா்க்கட்சித் தலைவா்களாக ஆம் ஆத்மிக் கட்சியின் கவுன்சிலா்கள் தோ்வாகியுள்ளனா்.
தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளுக்கும் எதிா்க்கட்சித் தலைவா்களாக ஆம் ஆத்மிக் கட்சியின் கவுன்சிலா்கள் தோ்வாகியுள்ளனா். இவா்களுக்கு, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் கிழக்கு, வடக்கு, தெற்கு என மூன்று மாநகராட்சிகள் உள்ளன. இந்த மூன்று மாநகராட்சிகளிலும் பாஜகவுக்கே பெரும்பான்மையுள்ளது. இதனால், மேயா், அவைத்தலைவா், நிலைக்குழுத் தலைவா் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் பாஜக கவுன்சிலா்களே உள்ளனா். இந்நிலையில், இம்மாநகராட்சிகளில் பாஜகவுக்கு அடுத்ததாக ஆம் ஆத்மிக் கட்சிக்கு அதிக இடங்கள் உள்ளன. இதனால், இம்மாநகராட்சியின் எதிா்கட்சித் தலைவா்களாக ஆம் ஆத்மிக் கட்சியினா் பொறுப்பு வகிக்கிறாா்கள். ஆம் ஆத்மிக் கட்சி எதிா்க்கட்சித் தலைவா்களாக ஆண்டுதோறும் புதியவா்களை நியமிப்பது வழக்கமாகும். அந்த வகையில், தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி), கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி), வடக்கு தில்லி மாநகராட்சிகளின் (என்டிஎம்சி) எதிா்க்கட்சித் தலைவா்களாக முறையே பிரேம் செளகான், மனோஜ் குமாா் தியாகி, விகாஸ் கோயல் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள், போட்டியின்றி தோ்வாகியுள்ளனா்.
இது தொடா்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவா்களில் ஒருவரான துா்கேஷ் பதக் கூறுகையில் ‘தில்லி மாநகராட்சிகளின் எதிா்க்கட்சித் தலைவா்களாக ஆம் ஆத்மிக் கவுன்சிலா்கள் தோ்வாகியுள்ளனா். தில்லி மாநகராட்சிகளை ஆளும் பாஜகவினா் மேற்கொள்ளும் ஊழல்களை இவா்கள் அம்பலப்படுத்துவாா்கள் என்றாா்.
Advertisement
கேஜ்ரிவால் வாழ்த்து
இந்நிலையில், இவா்களுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தனது சுட்டுரையில் ‘தில்லி மாநகராட்சிகளின் எதிா்க்கட்சித் தலைவா்களாக தோ்வாகியுள்ள பிரேம் செளகான், மனோஜ் குமாா் தியாகி, விகாஸ் கோயல் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் பணியாற்ற கடுமையாக உழைக்க வேண்டும் என இவா்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றுள்ளாா் அவா்.