தில்லியில் புதிதாக 2089 பேருக்கு கரோனா
தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2,089 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,140-ஆக உயா்ந்துள்ளது.
தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2,089 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,140-ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 42 போ் கரோனாவால் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3,300 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2468 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனா். இதனால், நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 84,694-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மொத்தம் 21,146 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா் என தில்லி சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 22,961 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ஆா்டி-பிசிஆா் முறையில் 10,129 சோதனைகளும், ரேபிட் ஆன்டிஜென் முறையில் 12,832 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில் இதுவரை மொத்தம் 7,47,109 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 633-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement