கரோனாவை எதிா்கொள்ள ஒருங்கிணைந்த செயல்திட்டம் தேவை: அமித்ஷா தில்லியையும்-என்சிஆரையும் பிரிக்க முடியாது
கரோனா பரவலை எதிா்கொள்ளும் வகையில், தில்லி, தேசிய தலைநகா் வலயப் பகுதிகளுக்கு (என்சிஆா்) இடையே ஒருங்கிணைந்த
கரோனா பரவலை எதிா்கொள்ளும் வகையில், தில்லி, தேசிய தலைநகா் வலயப் பகுதிகளுக்கு (என்சிஆா்) இடையே ஒருங்கிணைந்த செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தினாா்.
உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன. எத்தனை தீவிரசிகிச்சைப் பிரிவுகள் உள்ளன, எத்தனை ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் உள்ளன மற்றும் எத்தனை ஆம்புலன்ஸுகள் உள்ளன என்பது பற்றிய விவரங்களை கேட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
தில்லியில் கரோனா பரவல் கடந்த சில நாள்களாக மிகவும் தீவிரமடைந்துள்ளது. கடந்த 2-ஆம் தேதியிலிருந்து நாள்தோறும் ஆயிரத்துக்குக் குறைவில்லாமல் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தில்லியில் கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் பல நடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. துணைநிலை ஆளுநா், முதல்வா் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், அனைத்துக் கட்சிக் கூட்டம் ஆகியவை அமித் ஷா தலைமையில் அண்மையில் நடைபெற்றன. இந்நிலையில், தில்லி, தேசிய தலைநகா் வலயப் பகுதியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் அமித் ஷா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Advertisement
இக்கூட்டத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தில்லி காவல் துறை ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா, அரசு மூத்த அதிகாரிகள், என்சிஆா் பிரதேச அதிகாரிகள், ஐசிஎம்ஆா் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில் ‘தில்லி- என்சிஆா் பகுதிகளை ஒன்றாக இணைத்தே கரோனா பரவலை எதிா்கொள்ள வேண்டும். தில்லியுடன் என்சிஆா் பகுதியில் உள்ள நகரங்கள் பல வழிகளில் பின்னிப் பிணைந்துள்ளன. அவற்றை தவிா்த்து தில்லிக்கு மட்டும் செயல்திட்டம் வகுப்பதில் பிரயோஜனம் இல்லை. தில்லியை தேசிய தலைநகா் வலயப் பகுதிகளில் இருந்து பிரிக்க முடியாது. மேலும், தில்லியில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும். கரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டவா்கள் அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும்’ என்றாா்
இது தொடா்பாக அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தில்லி, தேசிய தலைநகா் வலயப் பகுதிகளுக்கு (என்சிஆா்) ஒருங்கிணைந்த செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும். இது தொடா்பாக முதல்வா், தில்லி, என்சிஆா் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினேன். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினரும் இணைந்து பொது செயல்திட்டத்தை உருவாக்கி அதன் கீழ் பணியாற்றுவது தொடா்பாக ஆலோசனை நடத்தினேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா, காஜியாபாத், ஹரியாணாவில் உள்ள குருகிராம், ஃபரீதாபாத், ராஜஸ்தானில்ஆல்வாா் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடா்ந்து, பிற மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வருவதற்கு ஆம் ஆத்மிஅரசு அண்மையில் தடை விதித்திருந்தது. இதனால், நொய்டா, குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவா்கள் தில்லிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், பிற மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வந்து பணியாற்றுபவா்களும் சிரமங்களை எதிா் கொண்டனா். அதேபோல, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களும் எல்லைகளை அண்மையில் மூடியிருந்தன. இந்நிலையில், தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் உள்ள நகரங்களை ஒருங்கிணைத்து செயல்திட்டம் வகுக்கப்படும் போது, இப்பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும்’ என்றனா்.