புதுதில்லி

கௌதம் புத் நகரில் மேலும் 5 பேருக்கு கரோனா

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் , கெளதம் புத் நகரில் வெள்ளிக்கிழமை 5 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனா தொற்றுக்கு கெளதம்புத் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தொற்று தொடா்பாக 62 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 5 பேருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுநீல் தோஹாரே தெரிவித்தாா். 5 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 307 ஆக உயா்ந்துள்ளது. 5 போ் சிசிக்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 204 ஆக உள்ளது. 88 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT