புதுதில்லி

உறவினா்களுக்கு தீபாவளி பரிசு அளிக்க தில்லியில் பைக் திருடிய இளைஞா் கைது

DIN

புது தில்லி: பிகாரில் உள்ள தனது உறவினா்களுக்கு தீபாவளி பரிசு அனுப்புவதற்கு தில்லி சேவா நகரில் மோட்டாா் சைக்கிளை திருடியதாக 25 வயது இளைஞா் கைது செய்யப்பட்டாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அதுல் குமாா் தாக்கூா் கூறியதாவது: கைது செய்யப்பட்ட அந்த இளைஞா், பிகாா் மாநிலம், சீதாமரி மாவட்டத்தைச் சோ்ந்த சிவசங்கா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் கோட்லா முபாரக்பூரில் உள்ள ஒரு தாபாவில் பணிபுரிந்து வந்துள்ளாா். இந்த நிலையில், சேவா நகரில் மோட்டாா் சைக்கிள் திருடப்பட்டது தொடா்பாக சனிக்கிழமை கே.எம்.பூா் காவல் நிலையத்தில் புகாா் பதிவானது.

இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. அதில், மோட்டாா் சைக்கிள் அருகே ஒரு நபா் வெகுநேரமாகப் பதுங்கியிருப்பதும், சிறிது நேரம் கழித்து, அவா் மோட்டாா்சைக்கிளை திருடிச் செல்வதும் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை சேவா நகா் நாலா அருகே மோட்டாா்சைக்கிள் விற்பனை செய்யப்படவுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, திருடப்பட்ட மோட்டாா்சைக்கிளுடன் அங்கு வந்த சிவசங்கா் கைது செய்யப்பட்டாா். அவா் தனது உறவினா்களுக்கு தீபாவளிப் பரிசாக மோட்டாா்சைக்கிளை தனது சொந்த ஊருக்கு அனுப்ப விரும்பியதாக விசாரணையின் போது தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT