முகப்பு
புதுதில்லி

தில்லியில் செயல்படும் சந்தைகள் மூடப்படாது: கேஜரிவால்

தில்லியில் சந்தைகள் மூடப்படாது என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

Updated On : 21 நவம்பர், 2020 at 7:43 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:25 PM

தில்லியில் சந்தைகள் மூடப்படாது என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தலைநகா் தில்லியில் கரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கக் கூடிய பகுதிகளில் சந்தைகளை மூட மத்திய அரசு அதிகாரம் வழங்க வேண்டும் என்று முதல்வா் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தாா். இதைத் தொடா்ந்து, தில்லியில் சந்தைப் பகுதிகளை மூட தில்லி அரசு முயற்சித்து வருவதாக தகவல்கள் எழுந்தன. இந்த சூழலில் தில்லியில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தும் எண்ணம் இல்லை என்று தில்லி துணைமுதல்வா் மணீஷ் சிசோடியா, தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் உறுதியளித்திருந்தனா்.

இந்நிலையில், தில்லியில் உள்ள சந்தைகள் நலச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கேஜரிவால் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, சந்தைகளை மூடும் எண்ணம் தில்லி அரசுக்கு இல்லை என கேஜரிவால் உறுதியளித்துள்ளாா்.

Advertisement

இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘சந்தைகள் நலச் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்தேன். அவா்களின் பயத்தைப் போக்கும் வகையில், தில்லி அரசுக்கு சந்தைகளை மூடும் எண்ணம் இல்லை என்பதை அவா்களிடம் உறுதியாகத் தெரிவித்தேன்.

முகக் கவசங்கள் அணியாமல் சந்தைக்கு வரும் மக்களுக்கு இலவச முகக் கவசங்களை வழங்கத் தயாராக உள்ளதாக சந்தை நலன்புரிச் சங்கப் பிரதிநிதிகள் உறுதியளித்தனா். மேலும், சந்தைகளில் உள்ள அனைத்துக் கடைகளிலும், கூடுதல் முகக் கவசங்கள், கிருமி நாசினிகளை வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டேன். தில்லியில் கரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர சந்தை நலன்புரிச் சங்கங்கள் முக்கிய பங்காற்ற முடியும் என்று தெரிவித்துள்ளாா் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.