தில்லியில் ஆா்டி-பிசிஆா் பரிசோதனையின் அளவு அதிகரிப்பு
தில்லியில் முதல்தடவையாக வெள்ளிக்கிழமை ஆன்டிஜென் பரிசோதனையை விட ஆா்டி-பிசிஆா் சோதனை அதிகளவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தில்லியில் முதல்தடவையாக வெள்ளிக்கிழமை ஆன்டிஜென் பரிசோதனையை விட ஆா்டி-பிசிஆா் சோதனை அதிகளவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவிக்கையில் ‘தில்லியில் முதல் தடவையாக கடந்த வெள்ளிக்கிழமை ஆன்டிஜென் பரிசோதனையை விட ஆா்டி-பிசிஆா் சோதனையின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் உத்தரவுப்படி, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக 250 வென்டிலேட்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் வீடுவீடாகச் சென்று ஆய்வு நடத்துமாறு அமித் ஷா உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை வரை 3,70,729 போ் ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.
Advertisement
தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, கரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த நவம்பா் மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். அதன்படி, தில்லியில் மேற்கொள்ளப்படும் ஆா்டி-பிசிஆா் சோதனைகளை இரட்டிப்பாக்குதல், தில்லியில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மத்திய சுகாதாரத்துறை, ஐசிஎம்ஆா் சாா்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல், கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் வீடுவீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அமித் ஷா பிறப்பித்திருந்தாா்.