நொய்டாவில் தனியாா் நிறுவன கட்டடத்தில் தீ விபத்து
தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் செயல்படாமல் உள்ள தனியாா் நிறுவனத்தின் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் செயல்படாமல் உள்ள தனியாா் நிறுவனத்தின் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, தீயணைக்கும் பணியில் பல தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: நொய்டாவில் உள்ள செக்டாா் 1-இல் தனியாா் நிறுவனம் ஒன்று உள்ளது. செயல்படாத இந்த நிறுவனத்தின் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் சுமாா் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு பல தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. மேலும், போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
Advertisement