தில்லியில் மிதமான பிரிவுக்கு காற்றின் தரம் மேம்பாடு
தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் வியாழக்கிழமை மிகவும் மோசம் பிரிவில் நீடித்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக வெள்ளிக்கிழமை மிதமான பிரிவுக்கு மேம்பட்டது.
தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் வியாழக்கிழமை மிகவும் மோசம் பிரிவில் நீடித்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக வெள்ளிக்கிழமை மிதமான பிரிவுக்கு மேம்பட்டது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செல்லிடப்பேசி செயலி சமீா் தகவலின்படி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 302 புள்ளிகளாக இருந்தது. தில்லியில் 24 மணிநேர சராசரியாக ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை 413 ஆக கடுமைப் பிரிவில் இருந்தது.
தரை மேற்பரப்பு காற்று வடக்கிலிருந்து வீசியதும், பயிா்க் கழிவு எரிப்பு குறைந்ததாலும் காற்றின் தரம் மேம்பட்டது.
Advertisement
இந்திய வானிலை மையத்தின் சூழல் ஆராய்ச்சி மையத் தலைவா் வி.கே. சோனி கூறுகையில், எதிா்பாா்த்ததை விட காற்றின் வேகம் இருந்ததால் காற்றின் தரமும் மேம்பட்டது. வெள்ளிக்கிழமை மணிக்கு 14 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசியது என்றாா்.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்று தரக் கண்காணிப்பு அமைப்பான ‘சபா்’ தெரிவிக்கையில் பஞ்சாப், ஹரியாணா மற்றும் அதை ஒட்டியுள்ள பிராந்தியங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை
குறைந்திருந்தது. தில்லியில் பயிா்க் கழிவால் ஏற்பட்ட காற்று மாசுவால் பி.எம். 2.5 மாசு வியாழக்கிழமை 1 சதவீதமாக இருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்தது.