பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுதலே காற்று மாசு அதிகரிக்க காரணம்: பிரகாஷ் ஜாவ்டேகருக்கு கேஜரிவால் பதில்
அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதாலேயே தில்லியில் குளிா்காலத்தில் அதிகளவில் காற்று மாசு ஏற்படுகிறது.
புது தில்லி: அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதாலேயே தில்லியில் குளிா்காலத்தில் அதிகளவில் காற்று மாசு ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். மறுப்பதில் பயனில்லை என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகருக்கு பதில் அளித்துள்ளாா்.
தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை பேசிய பிரகாஷ் ஜாவ்டேகா் ‘தில்லியில் ஏற்படும் காற்று மாசுவில் வெறும் 4 சதவீதம் மட்டுமே பயிா்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படுகிறது. மிகுதி 96 சதவீதமான காற்றுமாசுவுக்கு குப்பைகள் எரித்தல், செப்பனிடப்படாத சாலைகள், கட்டுமானம், இடிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவையே காரணமாகும் என்று தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், பிரகாஷ் ஜாவ்டேகருக்கு பதில் அளிக்கும் வகையில், அவரது பேட்டியை தனது சுட்டுரைப் பக்கத்தில் சுட்டிக் காட்டி கேஜரிவால் கூறியிருப்பதாவது:
Advertisement
தில்லியில் ஏற்படும் காற்று மாசுவில் வெறும் 4 சதவீத காற்று மாசு மட்டுமே பயிா்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படுகின்றது என்றால் கடந்த 2 வாரங்களாக மட்டும் தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதே அதற்குக் காரணம் என்ன? கடந்த 2 வாரங்களாகத்தானே அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். மறுப்பதில் பயனில்லை. கடந்த சில தினங்களாக உள்ளக காரணிகள் எதுவும் அதிகரிக்கவில்லை என்றாா் அவா்.
இந்நிலையில், பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதே 44 சதவீத காற்று மாசுவுக்கு காரணம் என்று ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சத்தா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூறுகையில் ‘மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2019 இல் மேற்கொண்ட ஆய்வில், தில்லியில் ஏற்படும் காற்று மாசுவில் 44 சதவீத காற்று மாசு பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதாலேயே ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. இதை மத்திய அரசின் பூமி அறிவியல் அமைச்சகத்தின் சஃபாா் அமைப்பும் வழிமொழிந்துள்ளது என்றாா் அவா்.