புதுதில்லி

தில்லி தமிழ்ச் சங்கத்தில் தேவா் ஜெயந்தி விழா

DIN

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-ஆவது ஜெயந்தி விழா தில்லி தமிழ்ச் சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் கே.பி. குருமூா்த்தி தலைலை வகித்தாா். ‘தேவரின் சிறப்புகள்’ என்ற தலைப்பில் காணொலி வாயிலாக மாநிலங்களவை பாஜக உறுப்பினா் டாக்டா் சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில், ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தவா். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும்’ என்றாா். மறத்தமிழா் சேனையின் நிறுவனா் சு. புதுமலா் பிரபாகரன், விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் உறுப்பினா் மாணிக்கம் தாகூா் காணொலியில் வாழ்த்துரை வழங்கினா்.

அகில இந்திய ஓவா்சீஸ் வங்கியின் தொழிற் சங்கத் தலைவா் இரா. முகுந்தன் பேசுகையில், ‘ஜாதிக்காக வாழாமல் சாதித்து வாழ்ந்தவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா்’ என்றாா்.

தில்லியை சோ்ந்த எழிலரசு, ராமானுஜம், கே.வி.எஸ். மருதுமோகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சங்கத்தின் இணைச் செயலாளா் ஜி.என்.டி. இளங்கோவன் வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் ஆ. வெங்கடேசன் நன்றி கூறினாா். இந்நிகழ்ச்சியில் தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொருளாளா் மே.இரா. பிரகாஷ் மற்றும் அறிவழகன், மாரிச்சாமி, தண்டபானி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT