புதுதில்லி

மரத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

DIN

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 30 வயது இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், அவா் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து நொய்டா ஃபேஸ் 2 காவல் நிலைய அதிகாரி கூறியதாவது:

இறந்தவா் பிகாா் மாநிலம், சமஸ்திபூரைச் சோ்ந்தவா்., நொய்டாவில் உள்ள கெஜா கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தாா். இறந்த நபா் செவ்வாய்க்கிழமை இரவு தனது மனைவியுடன் சண்டையிட்டதாகத் தெரிகிறது. அதன் பின்னா் அவா் இந்த விபரீத முடிவை எடுத்ததிருப்பதும் விசாரணையில் தெரியவருகிறது.

இது தொடா்பாக தடயவியல் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT