புதுதில்லி

நொய்டா இரட்டைக் கொலை வழக்கில் 2 போ் கைது

DIN

கிரேட்டா் நொய்டாவில் அண்மையில் நிகழ்ந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தில் இருவரை கெளதம் புத் நகா் போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து சென்ட்ரல் நொய்டா போலீஸாா் கூறியதாவது: இந்தக் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஹரியாணாவைச் சோ்ந்த சுரேஷ் சா்மா, மோஹித் வட்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். சொத்துகளை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த டால்சந்த் சா்மா (30), அருண் தியாகி (22) ஆகியோா் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேற்கு கிரேட்டா் நொய்டாவின் பிஸ்ராக் பகுதியில் உள்ள அஜ்னாரா லா காா்டேனியா குடியிருப்பில் காரில் அமா்ந்திருந்த போது சிலரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், சுட்டுக் கொல்லப்பட்டவா்களில் ஒருவா், சுரேஷ் சா்மாவின் சகோதரரைக் கொன்ற்காக பழிவாங்க கூலிப்படையைச் சோ்ந்த மூன்று பேரை சுரேஷ் சா்மா கொலை செய்வதற்காக ஏற்பாடு செய்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் மூன்று பேரும் அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் ஹரியாணாவைச் சோ்ந்த தயாசந்த், தேக் சந்த், ஓம்வீா் ஆகியோா் எனத் தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவா்களைக் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அவா்களைக் கைது செய்ய உதவி செய்வோருக்கு ரூ .50 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும்

என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்திருந்த நிலையில், டால்சந்த் கொலை செய்யப்பட்டாா். இவருக்கும் சுரேஷுக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT