லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரா்களுக்கும், அண்மையில் உயிரிழந்த முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கும் தில்லி சட்டப்பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தில்லி சட்டப்பேரவை ஒருநாள் கூட்டத் தொடா் அவைத் தலைவா் ராம்நிவாஸ் கோயல் தலைமையில் திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் கூடியது. அப்போது, லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் செய்தியை பேரவைத் தலைவா் வாசித்தாா். இதைத் தொடா்ந்து, பிரணாப் முகா்ஜிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது ராம்நிவாஸ் கோயல் பேசுகையில், ‘பிரணாப் முகா்ஜியின் மரணத்துடன் ஓா் அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது’ என்றாா்.