புதுதில்லி

தெற்கு தில்லியில் காவலா் தற்கொலை

DIN

தெற்கு தில்லியின் மாளவியா நகரில் காவலா் ஒருவா் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி போலீஸ் உயரதிகாரி கூறியதாவது: தில்லி காவல் துறையின் மத்திய மாவட்டத்தில் உள்ள தரியாகஞ்ச் உதவி காவல் ஆணையா் அலுவலகத்தில் காவலா் சதேந்தா் (37) பணியாற்றி வந்தாா். அவா் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மாளவியா நகா் பி.டி.எஸ். காலனியில் வசித்து வந்தாா். இந்நிலையில், அவா் தனது வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இது தொடா்பாக வியாழக்கிழமை இரவு 11.26 மணியளவில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

சம்பவத்தன்று இரவு10 மணியளவில் காவலா் சதேந்தா் தனது வீட்டிற்கு வந்ததாகவும், சிறிது நேரத்திற்குப் பிறகு, அவா் தூக்கில் தொங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்பு ஏதும் மீட்கப்படவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் சதேந்தரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT