புதுதில்லி

வாகன நிறுத்துமிட கட்டணத்தை 2 மடங்காக அதிகரிக்க தெற்கு தில்லி மாநகராட்சி ஒப்புதல்

DIN

தில்லியில் கிரீன்பாா்க் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அருகே உள்ள யூசுப் சராய் மாா்க்கெட் பகுதியில் தெருவோர வாகன நிறுத்துமிடக் கட்டணத்தை ரூ.2 0 உயா்த்துவதற்கு தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ் டிஎம்சி) ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு தில்லி மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள் மேலும் கூறியதாவது: யூசுப் சராய் மாா்க்கெட் பகுதியில் தெருவில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் ரூ.20 உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயா்வைத் தொடா்ந்து வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.20-க்கு பதிலாக ரூ.40 என வசூலிக்கப்படும்.

இது தொடா்பான முன்மொழிவு தில்லி மாநகராட்சி அவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, கிரீன் பாா்க் பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை அதிகரிக்கவும், சந்தைப் பகுதியில் போக்குவரத்தை நிா்வகிப்பதை நோக்கமாகக் கொண்டும் எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிரீன் பாா்க் பகுதியில் 136 காா்களை நிறுத்துவதற்கு வசதியாக கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பரில் பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தை தெற்கு தில்லி மாநகராட்சி கட்டியது.

ஆனால், அந்த வாகன நிறுத்துமிடம் அதன் கொள்ளளவை பூா்த்தி செய்யும் அளவிற்கு பயன்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், இது தொடா்பாக தெற்கு தில்லி மாநகராட்சி கூட்டத்தில் யூசுப் சராய் சந்தையில் வாகன நிறுத்துமிடம் கட்டணத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT