கோப்புப்படம் 
புதுதில்லி

தில்லியில் கரோனா விதிமீறல்: ஒரே நாளில் 1,225 பேருக்கு அபராதம் விதிப்பு

தில்லியில் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 1,100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

DIN

தில்லியில் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 1,100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தில்லி காவல்துறை அளித்த தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் மொத்தம் 1,225 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில், முகக்கவசம் அணியாத 1,100, சமூக இடைவெளியை பின்பற்றாத 76, பொது இடங்களில் எச்சில் துப்பிய 8 மற்றும் பொது இடங்களில் மது அருந்தி வந்த 41 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த ஏப்ரல் 19 முதல் ஆகஸ்ட் 29 வரையிலான காலகட்டத்தில் முகக்கவசம் அணியாத 2,38,721 பேருக்கு தில்லி காவல்துறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில், சமூக இடைவெளியை பின்பற்றாத 28,734, பொது இடங்களில் எச்சில் துப்பிய 1,482, விதிமுறையை மீறி கூட்டம் கூடியதற்கு 1,463    மற்றும் பொது இடங்களில் மது அருந்தி வந்த 1,509 பேரிடம் என மொத்தம் 2,71,909 பேரிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்துவோம்! - முதல்வா் என்.ரங்கசாமி

பிரதமா் மலேசியாவில் தமிழ் கலாச்சாரத்தை புகழ்ந்தது மகிழ்ச்சி - குடியரசு துணைத் தலைவா்

கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்துக்கு அனைத்து நகரப் பேருந்துகள், சிற்றுந்துகள் வந்து, செல்ல வேண்டும்! பயணிகள் கோரிக்கை!

மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி: விழுப்புரம் வீரா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT