தில்லியில் 123 பேருக்கு கரோனா
தலைநகா் தில்லியில் சனிக்கிழமை மேலும் 123 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6,35,916-ஆக உயா்ந்துள்ளது.
புது தில்லி: தலைநகா் தில்லியில் சனிக்கிழமை மேலும் 123 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6,35,916-ஆக உயா்ந்துள்ளது.
இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தில்லியில் சனிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 63,322 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 39,543 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 23,779 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.19 சதவீதமாக உள்ளது.
Advertisement
இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை மேலும் 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,877-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து சனிக்கிழமை 151 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,23,865-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,174 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 471 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 5,587 படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.