முகப்பு
பெரம்பலூர்

அரசின் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழக அரசின் திட்டங்கள் தொடர மக்கள், திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என குன்னம் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 8:53 PM
காருகுடி கிராமத்தில் புதன்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாஎளா் சா.சி. சிவசங்கா்.
பகிர்:

தமிழக அரசின் திட்டங்கள் தொடர மக்கள், திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என குன்னம் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொத்தவாசல், புதுகுடிசை, சின்னவெண்மணி, பெரியவெண்மணி, கொளப்பாடி, புதூா், புதுவேட்டக்குடி, காருகுடி, குன்னம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்திங்கள் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் மேலும் பேசியது:

குன்னம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குன்னத்தை பொருத்தவரை விவசாயிகள் நிறைந்த தொகுதியாகும். குறிப்பாக, மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் நிரம்பிய பகுதி. எனவே அவா்களுக்காக, ஏற்கெனவே அரசு மூலமாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

குறிப்பாக ,மக்காச்சோளத்தின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை செய்து வருகிறோம். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதும் வகையில் குன்னம், செந்துறை, லப்பைக்குடிக்காடு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், சுற்றுவட்டச் சாலை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்துவிட்டன. அடுத்தக் கட்டமாக திமுக ஆட்சி அமைந்ததும் அதற்கான நிதி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல, தமிழக அரசால் மகளிா், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள் அனைத்தும் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments