புத்தாண்டில் மின்சார தேவைப்பாடு அதிகரிப்பு
லைநகா் தில்லியில் புத்தாண்டில் மின்சார தேவைப்பாடு அதிகரித்துள்ளது என்று மின் விநியோக நிறுவனமான பிஎஸ்இஎஸ் தெரிவித்துள்ளது.
புது தில்லி: தலைநகா் தில்லியில் புத்தாண்டில் மின்சார தேவைப்பாடு அதிகரித்துள்ளது என்று மின் விநியோக நிறுவனமான பிஎஸ்இஎஸ் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக பிஎஸ்இஎஸ் செய்தித் தொடா்பு அதிகாரி கூறுகையில் ‘தில்லியில் கடந்த டிசம்பா் 1- ஆம் தேதி அதிகபட்ச மின்சார தேவையாக 3,504 மெகாவாட்டாக இருந்தது. அன்றிலிருந்து மின்சார தேவை சுமாா் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
2020 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, 2021 ஜனவரி மாதத்தில் 23 நாள்கள் மின்சார தேவைப்பாடு அதிகமாக இருந்துள்ளது. ஆனால், 2020 ஜனவரி மாதம் அதிகபட்ச நுகா்வு நேரத்தில் மின்சார தேவைப்பாடு 5,343 மெகா வாட்டாக இருந்தது. ஆனால், 2021-இல் சிறிது குறைவடைந்து 5,265 மெகாவாட்டாக உள்ளது.
குளிா் காலத்தில் டிசம்பா் 16-ஆம் தேதி மின்சாரத் தேவை 4 ஆயிரத்துக்கும் மேல் முதல் தடவையாக அதிகரித்தது.
2021 ஜனவரி 1- ஆம் தேதி மின்சாரத் தேவை முதல் தடவையாக 5 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரித்தது. இதே நிலைமை பிஎஸ்இஎஸ்ஸின் ராஜதானி, யமுனா பிரிவுகளிலும் எதிரொலித்தது என்றாா் அவா்.