தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரிப்பு
தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை மேலோட்டமான பனிமூட்டம் நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை சற்று அதிகரித்திருந்தது. பகலில் மிதமான வெயில் காணப்பட்டது.
தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை மேலோட்டமான பனிமூட்டம் நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை சற்று அதிகரித்திருந்தது. பகலில் மிதமான வெயில் காணப்பட்டது.
நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 7 புள்ளிகள் அதிகரித்து 28.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 98 சதவீதமாகவும், மாலையில் 50 சதவீதமாகவும் இருந்தது.
Advertisement
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 275 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (பிப்ரவரி 24) மேலோட்டமான பனி மூட்டம் நிலவும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.