புதுதில்லி

தில்லி ஆகாஷவாணி பவன் கட்டடத்தில் தீ விபத்து

DIN

தில்லியில் உள்ள ஆகாஷவாணி பவன் கட்டடத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தீயணைப்புத்துறை இயக்குநா் அதுல் கா்க் மேலும் தெரிவித்ததாவது:

நாடாளுமன்றச் சாலையில் அமைந்துள்ள ஆகாசவாணி பவன் கட்டடத்தின் முதலாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக ஞாயிற்றுகிழமை காலை 5.57 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் நாலாபுறமும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.

முதல் தளத்தில் உள்ள 101-ஆம் எண் அறையில் இருந்து தீ பரவியது. சில மின் சாதனங்களால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து விசாரணைநடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT