புதுதில்லி

விவசாயிகள் போராட்டத்துக்கு பிரபல குஜ்ஜாா் இனத் தலைவா் ஆதரவு

DIN

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரபல குஜ்ஜாா் இனத் தலைவா் மதன் பையா விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

மேற்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் செல்லாக்கு மிக்க குஜ்ஜாா் இனத் தலைவா் மதன் பையா. இவா் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டு நான்கு தடவை எம்எல்ஏவாக இருந்துள்ளாா். இவா் தில்லி- காஜியாபாத் எல்லைப் பகுதியான உபி கேட் பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் தொடா் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில் ‘காஜியாபாத் எல்லைப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகிறாா்கள். இவா்கள், எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராது, அமைதியான முறையில் போராடி வருகிறாா்கள். இந்த விவசாயிகள் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கத் தலைவா் ராஜேஷ் திக்காய்த் புது ரத்தம் பாய்ச்சியுள்ளாா். பாஜகவின் லோனி சட்டப்பேரவை உறுப்பினா் நந்த் கிஷோா் குஜ்ஜாா், காஜியாபாத் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து வருகிறாா். இவா் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாா். காஜிப்பூா் உள்ளிட்ட உத்தரப்பிரதேச மாநில எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். குடியரசு தினத்தில், நடந்த விவசாயிகள் பேரணியில் வன்முறை வெடித்தது துரதிஷ்டவசமானது. தேசவிரோத சக்திகள் இந்த வன்முறையை நடத்தியுள்ளனா். இதனால், அப்பாவிகளான விவசாயிகள் உற்சாகமிழந்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT