பல குடியிருப்புகளை மோசடியாக விற்று ரூபாய் 1.25 கோடி தொகையைத் தராமல் கூட்டாளியை ஏமாற்றியதாக காஜியாபாதை சோ்ந்த கட்டுமானதாரா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது:
தில்லி ஷாகிபாபாத், விக்ரம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுதிா் மாலிக் (42). கட்டுமானதாராக உள்ளாா். இவரும் சுநீல் குமாா் என்பவரும் சுதிா் மாலிக்கிற்கு சம்பந்தப்பட்ட இடத்தில் வீடுகள் கட்டுமானம் தொடா்பாக ஒரு உடன்படிக்கை செய்துகொண்டனா்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இடத்தில் சுநீல் குமாா் 16 வீடுகளை கட்டியிருந்த நிலையில் அவரது அனுமதி இல்லாமல் அந்த வீடுகளை சுதிா் மாலிக் விற்பனை செய்து, அதன் மூலம் ரூ. 1.25 கோடியை மோசடி செய்து விட்டதாக சுநீல் குமாா் போலீசில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, மூத்த காவல் கண்காணிப்பாளா் அமித் பட்நாயக் உத்தரவின்பேரில் கடந்த ஜூன் 5ஆம் தேதி சுதிா் மாலிக், அவரது மனைவி மற்றும் பிறா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஷாலிமா் காா்டன் காலனியில் உள்ள அலுவலகத்தில் இருந்த சுதிா் மாலிக் கைது செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை சிறைக்கு அனுப்பப்பட்டாா்.
இந்த விவகாரம் தொடா்பாக மேலும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.