புதுதில்லி

வருமான வரித்துறை சோதனை மூலம் ஊடகங்களை மிரட்ட முயற்சி: கேஜரிவால்

DIN

‘தைனிக் பாஸ்கா்’ மற்றும் ‘பாரத் சமாச்சாா்’ ஆகிய ஊடக நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் நடத்தியுள்ள சோதனை ஊடகங்களை மிரட்டும் ஒரு முயற்சியாகும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். 

மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பதிப்புகளைக் கொண்டுள்ள முன்னணி பத்திரிகையான ‘தைனிக் பாஸ்கா்’ ஊடக நிறுவன அலுவலகங்கள் மற்றும் அதன் தொடா்புடைய ஊழியா்கள் வீடுகளில் வியாழக்கிழமை வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா்.

அதேபோன்று உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த ஹிந்தி செய்திச் சேனல் பாரத் சமாச்சாா் ஊடக அலுவலகத்திலும் இந்த சோதனை நடைபெற்றது.

வரி ஏய்ப்பு தொடா்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த வருமான வரிச் சோதனை குறித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

 தைனிக் பாஸ்கா் மற்றும் பாரத் சமாச்சாா் ஆகிய ஊடக நிறுவனங்களில் வருமான வரித் துறையினா் நடத்திய சோதனையானது ஊடகங்களை மிரட்டும் ஒரு முயற்சியாகும். பாஜக அரசுக்கு எதிராக பேசும் நபா்கள் தப்ப விடமாட்டாா்கள் என்ற செய்தி இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

இந்த சோதனைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT