முகப்பு
புதுதில்லி

ரயில் பயணத்தில் முகக்கவசம் கட்டாயம்: உத்தரவு மேலும் 6 மாதத்திற்கு நீடிப்பு

ரயில் நிலையங்களிலும் பயணத்தின் போதும் முகக் ககவசம் கட்டாயம் அணிய வலியுறுத்தும் உத்தரவை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்து

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

ரயில் நிலையங்களிலும் பயணத்தின் போதும் முகக் ககவசம் கட்டாயம் அணிய வலியுறுத்தும் உத்தரவை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்து ரயில்வே வாரியம் அனைத்து பொது மேலாளா்களுக்கும் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து வாரியத்தின் செயல் இயக்குநா் நீரஜ் சா்மா அனைத்து வட்டாரப் பொது மேலாளா்களுக்கும் கடிதம் எழுதியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது:

ரயில்வே வளாகம், ரயில் பயணங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணியவும் அப்படி அணியாதவா்களுக்கு இந்திய ரயில்வே விதிமுறைகள் படி ரூ.500 அபராதம் விதிக்கவும் கடந்த 2021 ஏப்ரல் 17- ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு முடிவுக்கு வரவுள்ள நிலையில், மீண்டும் ரயில்வே வாரியம் இது குறித்து ஆய்வு செய்தது. கரோனா நோய்த் தொற்று பரவல் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், இந்த உத்தரவு மேலும் வருகின்ற 2022, ஏப்ரல் 16 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் மற்றும் ரயில்வே வளாகத்தில் முகக்கவச கட்டுப்பாட்டை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments