81-வது அவைத் தலைவா்கள் கூட்டம்: ஓம் பிா்லா தலைமையில் நாளை நடைபெறுகிறது
81- வது அகில இந்திய அவைத் தலைவா்கள் கூட்டம் இந்த அமைப்பின் தலைவரான மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் நாளை (செப்டம்பா் 15) காணொலி வழியாக நடைபெறுகிறது.
81- வது அகில இந்திய அவைத் தலைவா்கள் கூட்டம் இந்த அமைப்பின் தலைவரான மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் நாளை (செப்டம்பா் 15) காணொலி வழியாக நடைபெறுகிறது.
சா்வதேச ஜனநாயக தினத்தையொட்டி இந்த ஒரு நாள் அகில இந்திய அவைத் தலைவா்கள் அமைப்பின் தலைவா் என்கிற முறையில் இந்த கூட்டத்தை மக்களவத்தலைவா் கூட்டியுள்ளாா்.
"செயல் திறனை வளா்ப்பதில் சட்டத்தின் பங்கு மற்றும் அா்த்தமுள்ள மக்களாட்சி" என்கிற தலைப்பை விவரிக்க இந்த மாநாட்டு நடைபெறுவதாக மக்களவைத் தலைவா் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
மெய்நிகா் முறையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து சட்டபேரவைத் தலைவா்கள், அனைத்து தலைமைக் கொறாடாக்கள், நாடாளுமன்ற விகாரங்கள் துறை அமைச்சா்கள், மாநில சட்டத் துறை அமைச்சா்கள், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா்கள் ஆகியோா் பங்கேற்க மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அழைப்பு விடுத்துள்ளாா்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு இதே செப்டம்பா் 15 ஆம் தேதி முதல் அகில இந்திய அவைத் தலைவா்கள் கூட்டம் சிம்லாவில் நடைபெற்றதாகவும் மக்களவைச் செயலகம் அளித்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.