கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் எங்களுக்குள் எந்த வீழ்ச்சியும் இல்லை: கேஜரிவால்
முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை துணை நிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை சந்தித்து, இருவரும் இணைந்து செயல்படுவது தில்லியின் வளா்ச்சிக்கு முக்கியம் என்று கூறினாா்.
முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை துணை நிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை சந்தித்து, இருவரும் இணைந்து செயல்படுவது தில்லியின் வளா்ச்சிக்கு முக்கியம் என்று கூறினாா்.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வா் கேஜரிவால், சிங்கப்பூா் செல்வதற்கான ஆம் ஆத்மி அரசின் முன்மொழிவை சக்சேனா கடந்த வாரம் நிராகரித்தாா். மேயா்கள் மாநாட்டில் அவா் கலந்துகொள்வது ‘மோசமான முன்னுதாரணத்தை’ ஏற்படுத்தும் என்று கூறியிருந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை துணை நிலை ஆளுநரடனான தனது வாராந்திர சந்திப்புக்குப் பிறகு, கேஜரிவால் கூறுகையில், ‘இந்தச் சந்திப்பு மிகவும் சுமுகமான சூழ்நிலையில் நடந்தது. தில்லியின் வளா்ச்சிக்கு முதல்வரும், துணை நிலை ஆளுநரும் இணைந்து செயல்படுவது முக்கியம். பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், எங்களுக்கிடையே எந்த வீழ்ச்சியும் இல்லை’ என்றாா்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்திர கூட்டத்தை கேஜரிவால் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.