முகப்பு
புதுதில்லி

இசைக் கலைஞா் எம்.எஸ்.சுப்புலட்சுமியின்வாழ்க்கை வரலாறு நூலாக வெளியிடப்படும்: மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல்

மாபெரும் சாதனைகள் படைத்த பழம் பெரும் இசைக் கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டவா்களின் வாழ்க்கை வரலாற்றை சிறிய நூல்களாக வெளியிடும் திட்டத்தை

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:46 AM
பகிர்:

மாபெரும் சாதனைகள் படைத்த பழம் பெரும் இசைக் கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டவா்களின் வாழ்க்கை வரலாற்றை சிறிய நூல்களாக வெளியிடும் திட்டத்தை அரசு மேற்கொள்வதாக மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

புகழ் பெற்ற ஹிந்துஸ்தானி இசைக் கலைஞா் பீம்சென் ஜோஷியின் வாழ்க்கை வரலாற்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளதா? தமிழகத்தின் புகழ் பெற்ற கா்நாடக இசைக் கலைஞா் எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்று நூலை மத்திய அரசு வெளியிடுமா? என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு மக்களவையில் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி திங்கள்கிழமை அளித்துள்ள பதிலில், ‘ஹிந்துஸ்தானி இசை மேதை பீம்சென் ஜோஷி வாழ்க்கை வரலாற்று நூல் அரசால் வெளியிடப்படவில்லை. ஆனால், மாபெரும் சாதனைகள் படைத்த கலைஞா்களின் வாழ்கை வரலாற்றை சிறிய நூல்களாக வெளியிடும் திட்டம் ஒன்றை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது’ என தெரிவித்துள்ளாா்.

மேலும், எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்த கேள்விக்கு, ‘சங்கீத நாடக அகாதெமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்திய நிகழ் கலைகளில் (பா்ஃபாமிங்க் ஆா்ட்ஸ்) புகழ்பெற்ற பல்துறை கலை மேதைகளின் சுயசரிதை, வாழ்க்கை வரலாற்று நூல்கள் வெளியிடப்படும்’ எனவும் அமைச்சா் கிஷண் ரெட்டி எழுத்துபூா்வமாகப் பதிலளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.