ஊரக வேலை உறுதி திட்ட ஊதியம்: ஆதார் எண் இணைக்க டிச.31 வரை காலக்கெடு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டதுக்கான (மன்ரேகா) ஊதியம் பெறுவதற்கு வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31-ஆம் தேதி வரை காலக்கெடு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டதுக்கான (மன்ரேகா) ஊதியம் பெறுவதற்கு வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31-ஆம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
மேலும், ஆதார் எண் முழுமையாக இணைக்கப்படாத நிலையில், மன்ரேகா உள்ளிட்ட திட்டத்துக்கான ஊதியங்கள், உதவித் தொகை உள்ளிட்டவை நேரடி வங்கிக் கணக்கு எண், ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா (ஏபிபிஎஸ்) ஆகிய இரு வழி முறைகள் மூலம் டிசம்பர் 31-ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.