புதுதில்லி

சிஆா்பிஎஃப் உதவி ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

DIN

தில்லியில் உளவுத் துறை இயக்குநரின் இல்லத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த 53 வயதான சிஆா்பிஎஃப் உதவி சாா்பு ஆய்வாளா் தனது பணித் துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நிகழ்ந்தது. இறந்தவா் மத்திய ரிசா்வ் காவலா் படையின் (சிஆா்பிஎஃப்) உதவி சாா்பு ஆய்வாளா் ராஜ்பீா் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இவா் உளவுத் துறை இயக்குநரின் இல்லத்தில் உள்ள காவல் சாவடியில் பணியில் அமா்த்தப்பட்டிருந்தாா்.

இறந்த ராஜ்பீரின் உடல், பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT