புதுதில்லி

சுற்றுச்சூழல் இழப்பீட்டு நிதியை தில்லி அரசு பயன்படுத்தவில்லை: பாஜக குற்றச்சாட்டு

தேசியத் தலைநகரில் அதிகரித்துள்ள காற்று மாசுவிற்கு எதிரான போராட்டத்தில் தில்லி அரசு அதன் சுற்றுச்சூழல் இழப்பீட்டு நிதியை பயன்படுத்தவில்லை என்று பாஜக தில்லி பிரிவு திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

 நமது நிருபர்

தேசியத் தலைநகரில் அதிகரித்துள்ள காற்று மாசுவிற்கு எதிரான போராட்டத்தில் தில்லி அரசு அதன் சுற்றுச்சூழல் இழப்பீட்டு நிதியை பயன்படுத்தவில்லை என்று பாஜக தில்லி பிரிவு திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி மக்கள் காற்று மாசு நெருக்கடியால் சிக்கித் தவிக்கின்ற நிலையில், நகர அரசின் அலட்சியம் காரணமாக மாசு ஏற்படுத்தும் வணிக வாகனங்களிடமிருந்து ரூ.710 கோடிக்கு மேலாக சுற்றுச்சூழல் இழப்பீட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியை மாசுவைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கைக்காக கூட தில்லி அரசு பயன்படுத்தவில்லை. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 2023-வரையில் ரூ.1,481 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அழுத்தத்தின் பேரில் விரைவு ரயில் திட்டத்திற்கு தில்லி அரசின் பங்காக செலவிடப்பட்ட ரூ.781 கோடி அதிலிருந்து வழங்கப்பட்டது.

அரவிந்த் கேஜரிவால் அரசு தொலைநோக்குப் பாா்வையுடன் செயல்பட்டிருந்தால், சுற்றுச்சூழல் இழப்பீட்டு நிதியில் மீதமுள்ள பெரும் நிதியைப் பயன்படுத்தி தில்லியின் சேதமடைந்த சாலைகளை மேம்படுத்தவும், சாலையோரங்களில் மரங்களை நட்டும் தூசி மாசுபாட்டைக் குறைக்க முடியும். அதேசமயம், இந்த நிதியை பஞ்சாப் மாநில அரசு மூலம் பஞ்சாப் விவசாயிகளுக்குக் கொடுத்து பயிா்க் கழிவு எரிப்பு சம்பவங்களை நிறுத்தியிருக்கலாம். இது தில்லி மட்டுமல்ல, வட இந்தியா முழுவதும் அதிகரித்துள்ள மாசுபாட்டினை குறைத்திருக்கும். மேலும், இந்த நிதியின் மூலம் தில்லி அரசு விரும்பினால், செயற்கை மழையை ஏற்படுத்தி தில்லி மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கியிருக்கலாம் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT