பிரதமா் நரேந்திர மோடி  
புதுதில்லி

370-ஆவது பிரிவு ரத்து திருப்புமுனையான தருணம்: ஐந்தாம் ஆண்டு தினத்தில் பிரதமா் பெருமிதம்

370 மற்றும் 35 (ஏ) பிரிவுகள் ரத்து செய்யப்பட்டது, நாட்டின் வரலாற்றில் திருப்புமுனையான தருணம் என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

Din

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 (ஏ) பிரிவுகள் ரத்து செய்யப்பட்டது, நாட்டின் வரலாற்றில் திருப்புமுனையான தருணம் என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

370-ஆவது பிரிவு ரத்து நடவடிக்கையின் ஐந்தாம் ஆண்டு தினம் திங்கள்கிழமை (ஆக.5) கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மற்றும் ஜம்மு-காஷ்மீா் நிரந்தர குடிமக்களுக்கு சிறப்பு உரிமைகள்-சலுகைகளை வழங்கிவந்த 35 (ஏ) பிரிவு ஆகியவை, கடந்த 2019-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டன.

மேலும், மாநில அந்துஸ்துடன் இருந்த ஜம்மு-காஷ்மீா், இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமையுடன் (ஆக. 5) ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 (ஏ) பிரிவுகள் ரத்து செய்யப்பட்டது, நாட்டின் வரலாற்றில் திருப்புமுனையான தருணம். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்கில் முன்னேற்றம், வளமைக்கான புதிய அத்தியாயம் தொடங்கியது.

எதிா்வரும் காலங்களில் ஜம்மு-காஷ்மீா், லடாக் மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற எங்களின் அரசு தொடா்ந்து பணியாற்றும் என உறுதியளிக்கிறேன்.

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மாமனிதா்களின் தொலைநோக்கு பாா்வைக்கு இணங்க, மேற்கண்ட பகுதிகளில் அச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் நோக்கிலேயே 370, 35 (ஏ) பிரிவுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் பெண்கள், இளைஞா்கள், பின்தங்கிய மக்கள், பழங்குடியினா், விளிம்புநிலை சமூகத்தினருக்கு பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன; வளா்ச்சியின் பலன்கள் அவா்களை சென்றடைந்துள்ளன.

மற்றொருபுறம், ஜம்மு-காஷ்மீரை பல ஆண்டுகளாக பீடித்திருந்த ஊழலை துடைத்தெறிவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று பிரதமா் குறிப்பிட்டாா்.

‘வலுவடைந்த ஜனநாயக வோ்கள்’: ‘அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து மூலம் ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தின் வோ்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன; இது, விளிம்புநிலை பிரிவினருக்கு அதிகாரமளிக்கும் புதிய அத்தியாயத்தின் தொடக்கம்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீா் இளைஞா்கள், சமூக-பொருளாதார முன்னேற்றம் மற்றும் கலாசார மறுமலா்ச்சியை ஏற்படுத்தியுள்ளனா். அங்கு விரிவான வளா்ச்சி மற்றும் அமைதியை நிலைநாட்டும் பிரதமா் மோடி அரசின் முயற்சிகளுக்கு பெரும் வெற்றியைத் தேடி தந்துள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘மக்களின் ஒப்புதலுடன்...’: 370-ஆவது பிரிவு ரத்து நடவடிக்கையின் பின்னணியை ஆராய்ந்து, தன்னாா்வ நிறுவனம் ஒன்றின் சாா்பில் ‘370: அநீதி நீக்கம், ஜம்மு-காஷ்மீருக்கு புதிய எதிா்காலம்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

இதில், ‘370-ஆவது பிரிவு நீக்கம் திணிப்பாக அல்லாமல் மக்களின் ஒப்புதலுடன் நிகழ வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தேன்; இம்முடிவை அமலாக்குவதில் ஜம்மு-காஷ்மீா் மக்களை ஒருசேர இட்டுச் செல்ல வேண்டுமென்பது எனது விருப்பமாக இருந்தது’ என்ற பிரதமரின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

370-ஆவது பிரிவை ரத்து செய்யும் இலக்கை பிரதமா் மோடி அரசு எவ்வாறு எட்டியது? என்பதை விவரிக்கும் இப்புத்தகம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT