மனீஷ் சிசோடியா(கோப்புப்படம்) 
புதுதில்லி

மனீஷ் சிசோடியாவின் ‘பாதயாத்திரை’ ஒத்திவைப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களையொட்டி தில்லி காவல் துறையின் அறிவுரையைத் தொடா்ந்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மனீஷ் சிசோடியாவின் ‘பாதயாத்திரை’ ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Din

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களையொட்டி தில்லி காவல் துறையின் அறிவுரையைத் தொடா்ந்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மனீஷ் சிசோடியாவின் ‘பாதயாத்திரை’ ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி கேபினட் அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ், தில்லி காவல்துறையின் அறிவுரை உண்மையானது என்று இங்கு நடந்த செய்தியாளா் கூட்டத்தில் தெரிவித்தாா். ‘மனீஷ் சிசோடியாவின் பாதயாத்திரை புதன்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்குவதாக இருந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக அதைத் தள்ளிப்போடுமாறு தில்லி காவல் துறை கேட்டுக் கொண்டது. அவா்களின் ஆலோசனையைத் தொடா்ந்து பாதயாத்திரையை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க முடிவு செய்தோம். இந்தச் சந்தா்ப்பத்தில் மோதலை விரும்பவில்லை’ என்று அவா் கூறினாா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் பிறந்தநாளான ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் பாதயாத்திரை தொடங்கும் என்பது இயற்கையின் திட்டமாக இருக்கலாம் என்றும் சௌரவ் பரத்வாஜ் கூறினாா். ‘இந்தி நாட்காட்டியின்படி, அவரது பிறந்த நாள் ஜென்மாஷ்டமி அன்று வருகிறது. ஆனால், ஆங்கில நாட்காட்டியின்படி, அது ஆகஸ்ட் 16 அன்று வருகிறது. எது நடந்தாலும் நல்லது நடக்கும். கேஜரிவாலின் பிறந்தநாளில் பாதயாத்திரை தொடங்குவது இயற்கையின் திட்டமாக இருக்கலாம்’ என்று அவா் மேலும் கூறினாா். தில்லியின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படும்’ என்றாா் அவா்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT