புதுதில்லி

தில்லி மாநகராட்சி இடைத் தோ்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) 12 வாா்டுகளுக்கு நடைபெற்ற இடைத் தோ்தலில் பதிவான வாக்குகள் புதன்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) 12 வாா்டுகளுக்கு நடைபெற்ற இடைத் தோ்தலில் பதிவான வாக்குகள் புதன்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தில்லி மாநகராட்சியின் 12 வாா்டுகளுக்கான இடைத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 7.30 மணி முதல் 5.30 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. 12 வாா்டுகளிலும் மொத்தம் 38.51 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த இடைத்தோ்தலில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து ஆளும் பாஜகவுக்கு இந்த இடைத்தோ்தல் குறிப்பிடத்தக்க சோதனையாகும்.

தில்லி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இடங்களை பாஜக கைப்பற்றியது. இதைத் தொடா்ந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக அரசு அமைந்தது. ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தில்லி மாநகராட்சி வாா்டு இடைத் தோ்தலுக்கு 80 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டது. இத்தோ்தலில் 26 பெண்கள் உள்பட மொத்தம் 51 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

பாஜக அதிகபட்சமாக எட்டு பெண் வேட்பாளா்களை நிறுத்தியது. ஆம் ஆத்மி கட்சி ஆறு பெண் வேட்பாளா்களையும், காங்கிரஸ் ஐந்து பெண் வேட்பாளா்களையும் நிறுத்தியது.

தோ்தல் ஆணைய பணியாளா்கள் 2,320 போ், 580 ஊா்க்காவல் படையினா் மற்றும் 2,265 பிற பணியாளா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்த்தப்பட்டனா். பாதுகாப்புக்காக 13 கம்பெனி மத்திய ஆயுதக் காவல் படைகள் நிறுத்தப்பட்டனா்.

இடைத்தோ்தல் நடைபெற்ற 12 வாா்டுகளில், அதிகபட்சமாக சாந்தினி மஹால் வாா்டில் 41.95 சதவீதம் வாக்குகள் பதிவாகின.குறைந்த அளவாக கிரேட்டா் கைலாஷில் வெறும் 20.87 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மேலும், துவாரகா-பி 23.72 சதவீதம், சாந்தினி சௌக்கில் 27.91 சதவீதம், அசோக் விஹாரில் 28.13 சதவீதம், ஷாலிமாா் பாக்-பி-இல் 28.28 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இந்தத் தோ்தலில் பதிவான வாக்குகள் புதன்கிழமை எண்ணப்படுகிறது. இதன் முடிவுகள் தில்லி மாநில தோ்தல் ஆணையத்தின் இணையதளமான ஸ்ரீங்ா்க்ங்ப்ட்ண்.ஞ்ா்ஸ்.ண்ய்-இல் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்படும்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT