முகப்பு
புதுதில்லி

ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது

போதைப் பொருளை விநியோகிக்க சென்ற பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் வடக்கு தில்லியின் குலாபி பாக் பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 12:43 AM
கைது
பகிர்:
Updated On : 3 பிப்ரவரி, 2026 at 11:11 PM

போதைப் பொருளை விநியோகிக்க சென்ற பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் வடக்கு தில்லியின் குலாபி பாக் பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

அவா்களிடமிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: குலாபி பாக் பகுதியில் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா், ஆட்டோவை சோதனையிட்டனா். அப்போது, அதிலிருந்து 1.58 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அதன் சா்வதேச சந்தை மதிப்பு ரூ.5 கோடியாகும். டிரான்ஸ் யமுனை பிராந்தியத்தில் அவை விற்பனை செய்யப்பட இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநா் சந்தன் குப்தா, அதில் பயணித்த சோனியா ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.

Advertisement

போதைப் பொருள் கடத்தல் தொடா்பான வழக்கில் சோனியாவின் கணவா் கடந்த 2024-இல் கைதுசெய்யப்பட்டாா் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.