கோப்புப் படம் File photo
புதுதில்லி

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

பிகாா் மாநிலம் பாட்னா அருகே போலி மருந்துகள் மற்றும் மனோவியல் பொருள்களை தயாரித்து மீண்டும பேக்கேஜ் செய்யும் தொழிற்சாலையை தில்லி போலீஸாா் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Syndication

புது தில்லி: பிகாா் மாநிலம் பாட்னா அருகே போலி மருந்துகள் மற்றும் மனோவியல் பொருள்களை தயாரித்து மீண்டும பேக்கேஜ் செய்யும் தொழிற்சாலையை தில்லி போலீஸாா் கண்டுபிடித்துள்ளதாக திங்கள்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: தில்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆா் விசாரணையைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிகாரில் இதேபோன்ற இரண்டு சட்டவிரோத மருந்து நிறுவனங்கள் அம்பலமாகியட சில நாள்களுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

முந்தைய கைதுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் அருண் என அடையாளம் காணப்பட்ட ஒரு குற்றவாளியை விசாரித்ததில், குற்றப்பிரிவு குழு, சட்டவிரோத உற்பத்தி மற்றும் மீண்டும் பேக்கேஜ் செய்யும் பிரிவை நடத்தி வந்ததாகக் கூறப்படும் மற்றொரு சந்தேக நபரான பிரிஜேஷ் குறிவைக்கப்பட்டாா்.

அருண் முன்பு சட்டவிரோதமாக ஓபியாய்டுகளை தயாரித்து விநியோகிப்பதை ஒருங்கிணைத்து, ஒரு ரகசிய மருந்து பிரிவை நடத்தி வந்த்து கண்டறியப்பட்டது. அவரது வெளிப்பாட்டின் அடிப்படையில், உள்ளூா் மருந்துத் துறையுடன் கூடிய குழு அந்த பிரிவை சோதனை செய்தது.

இது செல்லுபடியாகும் உற்பத்தி உரிமம் இல்லாமல், உற்பத்தி மற்றும் பகுப்பாய்வு வேதியியலாளா்கள் உள்பட கட்டாய தொழில்நுட்ப ஊழியா்கள் இல்லாத நிலையில் இயங்குவது கண்டறியப்பட்டது. உரிய நடைமுறையின்படி சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த வளாகத்திலிருந்து ஏராளமான போலி மாத்திரைகள், சிரப்கள், இயந்திரங்கள் மற்றும் பேக்கேஜிங் பொருள்களை போலீஸ் குழு பறிமுதல் செய்துள்ளது. காலாவதியான மருந்துகள் மீண்டும் பேக்கேஜ் செய்யப்பட்டு போலி மருத்துவ முகவா்கள் மூலம் அதிக விலைக்கு சந்தைக்கு திருப்பி விடப்படுவதாகவும், இது பொது சுகாதாரத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் குழு சந்தேகிக்கிறது.

இந்த நடவடிக்கையின் மூலம், இந்த வழக்கில் இதுவரை ஒன்பது பேரைக் கைது செய்து, 13 கிலோவுக்கும் அதிகமான டிராமடோல் பவுடா் மற்றும் 500 கிராமுக்கும் அதிகமான அல்பிரஸோலம் மற்றும் பிற சைக்கோட்ரோபிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற உறுப்பினா்களைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

ஆலங்குளத்தில் ஐவா் கால்பந்துப் போட்டி: நாகா்கோவில் அணி சாம்பியன்

தமிழகத்தில் சூதாட்ட தளங்களை தடை செய்ய நடவடிக்கை: முகமது நசிமுத்தின்

மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி

உண்மைக் குற்றவாளிகளை திமுக அரசு தப்பிக்க வைக்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளா்கள்

SCROLL FOR NEXT