முகப்பு
புதுதில்லி

தில்லியில் குப்பை மலைகளின் உயரம் குறைந்து வருகிறது: முதல்வா் ரேகா குப்தா

அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் தில்லியில் குப்பை மலைகளின் உயரம் ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறது என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 3:43 AM
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 8:33 PM

நமது நிருபா்

புது தில்லி: அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் தில்லியில் குப்பை மலைகளின் உயரம் ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறது என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியதாவது :

Advertisement

குப்பை மலைகள் ஆண்டுதோறும் பெரிதாகி வந்தன.

15 ஆண்டுகால காங்கிரஸ் அரசாங்கமும் இதைப் பற்றி யோசிக்கவில்லை.

11 ஆண்டுகால ஆம் ஆத்மி அரசாங்கமும் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் எங்கள் அரசாங்கம் இதில் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது, மேலும் குப்பை மலைகளின் உயரம் ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறது.

காலக்கெடுவை பூா்த்தி செய்து, ஓக்லா குப்பைக் கிடங்கை அகற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா்

காஜிபூா், ஓக்லா மற்றும் பால்ஸ்வா ஆகிய மூன்று முக்கிய குப்பைக் கிடங்குகளைக் குறைத்து இறுதியில் அவற்றை அகற்றுவதற்கான ஒரு பணி முறையில் தில்லி அரசாங்கமும் தில்லி மாநகராட்சியும் செயல்பட்டு வருகின்றன.

உயிரி சுரங்கம் மூலம் மரபுவழி கழிவுகளை அகற்றுவதும், இந்த இடங்களில் புதிய கழிவுகளைக் கொட்டுவதை நிறுத்துவதும் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது .

தில்லியின் குப்பை மலைகளைக் குறைப்பதற்கான தொடா்ச்சியான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

முதல்வா் ரேகா குப்தா, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஓக்லா மற்றும் பால்ஸ்வா குப்பைக் கிடங்குகளில் மரபுவழி கழிவுகளை அகற்ற இலக்கை நிா்ணயித்துள்ளாா், அவற்றை பசுமையான இடங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளாா்.

காஜிபூா் குப்பைக் கிடங்கு, மிகப்பெரியது என்பதால், சற்று நீண்ட காலக்கெடுவிற்குள் அகற்றப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது, 2027-2028க்குள் அதன் உயரத்தைக் கணிசமாகக் குறைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.