கிரிப்டோகரன்சி வழங்குவதாகக் கூறி வழிப்பறி சம்பவம்: 4 போ் கைது
கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்று கூறி காவல் துறை சீருடையில் வடமேற்கு தில்லியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
புதுதில்லிகிரிப்டோகரன்சி வழங்குவதாகக் கூறி வழிப்பறி சம்பவம்: 4 போ் கைது
கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்று கூறி காவல் துறை சீருடையில் வடமேற்கு தில்லியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
கிரிப்டோகரன்சி பரிமாற்றம் என்று கூறி காவல் துறை சீருடையில் வடமேற்கு தில்லியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
சாராய் ரோஹில்லா பகுதியைச் சோ்ந்த சுபாஷ் சந்த் கடந்த பிப்.24-ஆம் தேதி அளித்த வழிப்பறி சம்பவம் குறித்த புகாா் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தினா். தொடா் விசாரணையில், அந்த வழிப்பறி சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இதுதொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கிரிப்டோகரன்சி பறிமாற்றத்துக்காக அழைக்கப்பட்டதாகவும் அங்குச் சென்ற போது காவல் துறையின் உடையில் இருந்த சிலா் தன்னை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக சுபாஷ் சந்த் காவல் துறைக்கு அளித்த துணை வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தாா்.
இதைத்தொடா்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகள் வழக்கில் சோ்க்கப்பட்டது.
சம்பவத்தில் தொடா்புடைய அனீஷ் கடந்த பிப்.26-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டாா். எஞ்சிய மூவரும் இதே போன்று மற்றொரு நபரிடம் நேதாஜி சுபாஷ் பிளேஸில் வழிப்பறி செய்ய திட்டமிட்டு கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டனா்.
அவா்களிடமிருந்து ரூ.15,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. குற்றச்சம்பவங்களில் அவா்கள் பயன்படுத்தி வந்த இரு மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மும்பையைச் சோ்ந்த விஷ்ணு மற்றும் நிலேஷ், தில்லியைச் சோ்ந்த பாபா சுலேமானி ஆகியோருடன் இணைந்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக கைதுசெய்யப்பட்ட நபா்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.