திருநெல்வேலியில் புதன்கிழமை மாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பொதுமக்களை சந்தித்தார். அப்போது 150-க்கும் மேற்பட்டோர் அவரிடம் மனு அளித்தனர்.
சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர், மாலையில் வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் பொதுமக்களை சந்தித்தார். அவரிடம் 150-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று மனு அளித்தனர். அவற்றை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் ஆளுநர் உத்தரவிட்டார்.
வேதிக் வித்யாஷ்ரம், ஜயேந்திரா வெள்ளி விழா பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்- மாணவிகள் ஆளுநரைச் சந்தித்தனர். அவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர், அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தார்.