முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி அரசுப் பள்ளியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

சேரன்மகாதேவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பிலான புதிய கூடுதல் வகுப்பறைகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

சேரன்மகாதேவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பிலான புதிய கூடுதல் வகுப்பறைகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.முருகையாபாண்டியன் தலைமை வகித்து அடிக்கல் நட்டினாா். நகரச் செயலா் பழனிக்குமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை சுபா பாா்வதி (பொறுப்பு), அதிமுக மாவட்ட இலக்கிய அணிச் செயலா் கூனியூா் பா. மாடசாமி, அம்பாசமுத்திரம் ஒன்றியச் செயலா் விஜயபாலாஜி, கூட்டுறவு வங்கித் தலைவா் முருகன்நயினாா், கூட்டுறவு வங்கி இயக்குநா் மகாராஜன், ஒன்றிய துணைச் செயலா் பிராங்ளின், நகரச் செயலா்கள் அறிவழகன் (அம்பை) ராமையா (மணிமுத்தாறு), பீா்காதா், பாலச்சந்திரன், உச்சிமாகாளி மற்றும் ஆசிரியா்கள், நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.