நரிக்குளத்தில் ரூ. 6 லட்சத்தில்சாலை சீரமைப்பு
கன்னியாகுமரியை அடுத்த நரிக்குளம் காலனி தொடங்கி நாற்கரசாலை வரை ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியை அடுத்த நரிக்குளம் காலனி தொடங்கி நாற்கரசாலை வரை ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் தொடங்கிய இப்பணியை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பேராசிரியா் இ.நீலபெருமாள் தலைமை வகித்தாா். மாநில அதிமுக இலக்கிய அணி துணைச் செயலா் கவிஞா் டி.சதாசிவம், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன், மகாராஜபுரம் ஊராட்சித் தலைவா் கே. இசக்கிமுத்து, மாவட்ட அதிமுக வா்த்தக அணி செயலா் ஜெஸீம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.