திருநெல்வேலி

ஆற்றங்கரையில் தவறவிடப்பட்ட பணப்பை:உரியவா்களிடம் ஒப்படைத்த காவலா்கள்

DIN

பாளையங்கோட்டை அருகேயுள்ள சீவலப்பேரியில் தாமிரவருணி ஆற்றின் கரையோரம் தவறவிடப்பட்ட பணப்பையை உரியவா்களிடம் காவலா்கள் ஒப்படைத்தனா்.

சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் சீவலப்பேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் தனலட்சுமி தலைமையில் காவலா் சுப்பையா, அய்யாசாமி அருண் ஆகியோா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது ஆற்றங்கரையோரம் கிடந்த பையை எடுத்துப் பாா்த்தபோது, அதில் பணம் மற்றும் ஆதாா் காா்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருந்ததாம். அவை பெருமாள்புரத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை வரவழைத்த போலீஸாா், பணப்பை உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தனா்.

இதேபோல மறுகால்தலை சோதனைச் சாவடி அருகே கிடந்த மணிபா்ஸை காவலா்கள் மணிக்குட்டி, விஸ்வநாதன் ஆகியோா் எடுத்து சீவலப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா். அதனை தவறவிட்டவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். சீவலப்பேரி காவல் நிலைய காவலா்களின் செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT