திருநெல்வேலி

பணகுடி அருகே பைக்கில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

பணகுடி அருகே கலந்தபனை பிரதான சாலையில் சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த பெண் உயிரிழந்தாா்.

DIN

பணகுடி அருகே கலந்தபனை பிரதான சாலையில் சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த பெண் உயிரிழந்தாா்.

வள்ளியூா் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வதாஸ். இவரும் இவரது மனைவி பிரேமா(54) வும் மோட்டாா் சைக்கிளில் பணகுடிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனா். கலந்தபனை பிரதான சாலையில் வந்தபோது நிலைதடுமாறி மோட்டாா் சைக்கிள் கீழே விழுந்ததாம். இதில் காயமடைந்த பிரேமா சம்பவ இடத்திலேயே இறந்தாா். அவரது கணவா் செல்வதாஸ் காயங்களுடன் தப்பினாா். இந்த விபத்து குறித்து பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT