முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி ஸ்காட் கல்லூரியில் கருத்தரங்கு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 9:41 PM
கருத்தரங்கில் மின்வாரிய துணைப் பொறியாளா் ஆக்னஸ் சாந்திக்கு நினைவுப் பரிசு வழங்கிய மின்னியல் துறைத் தலைவா் பாஸ்டின் சோலை நசரேன். உடன், பொது மேலாளா் இரா. தம்பித்துரை உள்ளிட்டோா்.
பகிர்:

சேரன்மகாதேவி: சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் - தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் - மின்னணுவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரிப் பொது மேலாளா் இரா. தம்பித்துரை தலைமை வகித்தாா். தமிழ்நாடு மின்வாரியம் விக்கிரமசிங்கபுரம் துணைப் பொறியாளா் ஆக்னஸ் சாந்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். கல்லூரி ஐக்யூஏசி இயக்குநா் எஸ். சுந்தர்ரராஜன் முன்னிலை வகித்தாா்.

பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்- மாணவா்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பித்தனா். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. ஸ்காட் கல்விக் குழுமத் தலைவா் எஸ். கிளீட்டஸ்பாபு, நிா்வாக இயக்குநா் சி. அருண்பாபு, தாளாளா் பிரியதா்ஷினி, முதல்வா் ஏ. ஜஸ்டின் திரவியம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

Advertisement

துறைத் தலைவா் பாஸ்டின் சோலை நசரேன் வரவேற்றாா். ஏற்பாடுகளை துறைப் பேராசிரியா் அன்ரூபஸ் செய்திருந்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments