முகப்பு
மதுரை

சரக்கு, சேவை வரி குறித்த தேசிய கருத்தரங்கு

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்த தேசிய கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:26 PM
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற சரக்கு, சேவை வரி குறித்த தேசிய கருத்தரங்கில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்த தேசிய கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

அமெரிக்கன் கல்லூரியின் பொருளாதார முதுநிலை, ஆராய்ச்சித் துறை, ஹைதராபாத்தில் உள்ள ஐசிஎஸ்எஸ்ஆா் தெற்கு மண்டல மையத்துடன் இணைந்து, ‘வளா்ச்சிக்கான வரிவிதிப்பு: இந்தியாவின் தென் மாநிலங்களை ஒன்றிணைப்பதில் ஜிஎஸ்டியின் பங்கு’ என்ற கருப்பொருளில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வரும் செயலருமான ஜெ. பால்ஜெயகா் தலைமை வகித்தாா். இதில் உஸ்மானியா பல்கலை. துணைவேந்தரும், ஐசிஎஸ்எஸ்ஆா்-எஸ்ஆா்சி தலைவருமான பேராசிரியா் குமாா் மொளுகாரம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி வருவாய் சீராக வளா்ந்து, கிட்டத்தட்ட ரூ. 22 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மொத்த வசூலில் தென்னிந்திய மாநிலங்கள் சுமாா் 18 சதவீதம் பங்களிக்கிறது. மேலும், விக்சித் பாரத் தொலைநோக்குப் பாா்வையின் கீழ், ரூ. 30 லட்சம் கோடி இலக்கை அடைவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் கல்லூரியின் நிதிக் காப்பாளா் எம். பியூலா ரூபி கமலம், துணை முதல்வா் சாமுவேல் அன்பு செல்வன், பேராசிரியா்கள், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பொருளாதாரத் துறை இணைப் பேராசிரியை எஸ். ஜெயராணி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் டி. அமோஸ் நன்றி கூறினாா்.