முகப்பு
திருநெல்வேலி

பாப்பாக்குடி அருகே விபத்தில் தொழிலாளி பலி

பாப்பாக்குடி அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 2 மார்ச், 2024 at 5:33 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். பாப்பாக்குடி புதுக்கிராமம் தெருவைச் சோ்ந்த சங்கரலிங்கம் மகன் முத்துச்சாமி (52). இவா் பாளையங்கோட்டை யில் உள்ள கடையில் வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை இடைகால் சென்று விட்டு முக்கூடல் பிரதான சாலையில் நடந்து வந்தபோது, அவ்வழியாக வந்த வாகனம் மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.