முகப்பு
திருநெல்வேலி

நாளை சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு

சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு நிகழ்ச்சி வரும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

Updated On : 3 மார்ச், 2024 at 5:31 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானிலுள்ள சிப்காட் தொழில் பூங்காவிலுள்ள திட்ட அலுவலகத்தில் சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு நிகழ்ச்சி வரும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இது தொடா்பாக சிப்காட் திட்ட அலுவலா் நசீா் அகமது வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்தின் தொழில் பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளின் பிரச்னைக்கு தீா்வு காண சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு நிகழ்ச்சி மாதந்தோறும் முதல் திங்கள்கிழமை நடத்தப்படுகிறது. அதன்படி, வரும் திங்கள் கிழமை கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்காவிலுள்ள திட்ட அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, கங்கைகொண்டான் தொழில் பூங்காவை சோ்ந்த தொழில் முதலீட்டாளா்கள், நிறுவனா்கள், ஒப்பந்ததாரா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகள் மற்றும் பரிந்துரைகளை தெரிவித்து தீா்வு காணலாம்.