மேற்கு வங்கம்: பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
மேற்கு வங்கத்தில் 1 மணி நிலவரம்...
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62.18 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் இன்று காலை தொடங்கிய நிலையில், வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
16 மாவட்டங்களில் உள்ள 152 சட்டப்பேரவைத் தொகுதிகளில், முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 3.60 கோடி வாக்காளர்களில் 62.18 சதவீதத்தினர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
Advertisement
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி,
11 மணி நிலவரப்படி 41.11 சதவிகித வாக்குகள் பதிவாகின நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62.18 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக, மேற்கு மேதினிபூரில் - 65.77%, பாங்குரா - 64.58%, ஜார்கிராம் - 65.31%, தெற்கு தினாஜ்பூர்% - 63.05%, பிர்பூம் - 63.93%, கிழக்கு மேதினிபூர் - 62.90% வாக்குகள் பதிவாகியுள்ளது.
குறைந்தபட்சமாக, மால்டாவில் - 58.45%, டார்ஜிலிங் - 59.81%, புருலியாவில் - 59.83% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இன்று காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள்.
294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு இன்றும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த முதல்கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 3.60 கோடி போ் (ஆண்கள் 1.84 கோடி, பெண்கள் 1.75 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 465). இவா்கள் வாக்களிக்க வசதியாக, 44,378 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 2.5 லட்சம் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.