சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!
சென்னையில் 1 மணி நிலவரப்படி 54.58 சதவிகித வாக்குப்பதிவு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் உள்ள தொகுதிகளில் பகல் 1 மணி நிலவரப்படி 54.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ன.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 56.81 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் வாக்குப்பதிவு தொடங்கி 6 மணி நேரத்தில் 3 கோடிக்கும் மேற்பட்டோர் தங்கள் வாக்குகளை செலுத்தியிருக்கிறார்கள். அதாவது 3.2 கோடிபேர் இதுவரை தமிழகத்தில் வாக்களித்துள்ளனர்.
சென்னையில் உள்ள தொகுதிகள் வாரியாக..
Advertisement
விருகம்பாக்கம் - 59.30 சதவிகிதம்
அண்ணாநகர் - 56.61 சதவிகிதம்
பெரம்பூர் - 56.24 சதவிகிதம்
சைதாப்பேட்டை - 52.76 சதவிகிதம்
தி.நகர் - 58.01 சதவிகிதம்
ஆயிரம் விளக்கு - 55.05 சதவிகிதம்
வேளச்சேரி - 56.26 சதவிகிதம்
வில்லிவாக்கம் - 56.66 சதவிகிதம்
சேப்பாக்கம் - 53.55 சதவிகிதம்
ஆர்கே. நகர் - 55.68 சதவிகிதம்
மயிலாப்பூர் - 48.86 சதவிகிதம்
எழும்பூர் - 53.67
ராயபுரம் - 49.67 சதவிகிதம்
கொளத்தூர் - 56.59 சதவிகிதம்
துறைமுகம் - 54.39 சதவிகிதம்
திருவிக நகரில் குறைந்தபட்சமாக 48.74 சதவிகிதம் பதிவாகியிருக்கிறது.